வாக்குவாதம்
சியம்பலாந்துவ-களுகலவத்த பகுதியில் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்தே குறித்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 37 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சியம்பலாந்துவ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.