மார்பக அறுவை சிகிச்சையை வீட்டில் மறைத்த பெண் : கணவரின் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

335

அதிர்ச்சி சம்பவம்

சீனாவில் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண், கண், காது, மூக்கு மற்றும் வாயிலிருந்து அதிக இரத்தம் வெளியேறி திடீரென இ றந்துள்ளார். சீனாவை சேர்ந்த Yang Xue என்கிற 28 வயது பெண் கடந்த 18ம் திகதியன்று வெளியில் சென்றுவிட்டு வருவதாக கணவரிடம் கூறிவிட்டு, காலை 10 மணிக்கு கிளம்பியுள்ளார்.

பின்னர் அவர் வீடு திரும்பியதும் மாலை 5.35 மணியளவில் திடீரென கண், காது, மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அவருடைய கணவர் பதறிப்போய் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போன் செய்தார்.

விரைந்து வந்த ஊழியர்கள் Yang Xue-ஐ பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் அவருடைய கழுத்து பகுதியில் ஊசி குத்தப்பட்டதற்கான ஏராளாமான அடையாளங்கள் இருப்பதாய் பார்த்து Yang Xue-வின் கணவர் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, Yang Xue வீட்டிற்கு தெரியாமல் ஹெனான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது.

பின்னர் மருத்துவமனைக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மூன்று பேருமே பிளாஸ்டிக் அறுவகை சிகிச்சை செய்வதற்கான தகுதியற்றவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் மருத்துவமனைக்கு தற்காலிகமாக சீல் வைத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.