வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா!!(படங்கள்)

448

வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது

வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடை பெற்ற இவ் விழாவில் மங்கள விளக்கினை தம்பையா சிவபாலன் – மனோரஞ்சிதம் தம்பதியர் ஏற்றி வைத்தனர்.

சிறப்பு நிகழ்ச்சியாக தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் “நான் கலந்து பாடுங்கால்” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இவ் விழாவில் திருவாசகத் திருமுறைக்குத் தொண்டாற்றிவரும் கலாபூசணம் வை.செ.தேவராசா அவர்களையும் நாதஸ்வர வித்துவான் கலாபூசணம் அ.பாலச்சந்திரன் அவர்களையும் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

12 3 4