இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகலா : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

327

Manmohanபிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் நடந்து வருகிறது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்து வருகிறார்.

இந்நிலையில் வருகிற ஜனவரி 3ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் விதமாக, தனது பதவி விலகல் குறித்து அறிவிப்பை மன்மோகன் சிங் வெளியிடுவார் என்றும் செய்தி வெளியானது. இதனால் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் பிரதமர் பதவி விலகல் குறித்த தவலை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் பதவி விலக மாட்டார் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

அதே சமயம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான மேடை அறிவிப்பு நிகழ்ச்சி ஒன்றை மன்மோகன் சிங் நிச்சயம் நடத்துவார் என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.