வவுனியா வடக்கு பிரதேசங்களான ஊஞ்சல்கட்டி, மருதோடை, வெடிவைத்தகல் உட்பட பல கிராமங்களுக்கான வீதி மக்கள் பயன்படுத்த முடியாதிருந்த நிலையில் காணப்பட்டது.
இவ் வீதியினை மக்களின் நலன் கருதி வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனின் முயற்சியால் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், வவுனியா வடக்கு பிரதேசத்தில் பணியாற்றும் அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் வீதி செப்பனிடப்பட்டது.