இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகுக்கு ஏற்பட்ட நிலை : தீயில் எரிந்து நாசம்!!

308

இலங்கை கு டியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று தீ விபத்தில் எரிந்து அ ழிந்துபோயுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியூனியன் தீவிற்கு இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக ரியூனியன் தீவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி இலங்கை கு டியேறிகளை அழைத்துக்கொண்டு குறித்த படகு ரியூனியன் தீவை சென்றடைந்துள்ளது.

மீன்பிடி உபகரணங்களுடன் “ரோஷன்” என்று பெயரிடப்பட்ட குறித்த படகு ரீயூனியன் தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த படகு நேற்று முன்தினம் தீ க்கிரையாகியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்நாட்டு பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.