வெளியூரில் கணவன் ” இரவில் தனியாக சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி!!

279

மனைவிக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் இரவில் தனியாக சென்ற கல்லூரி பேராசிரியை மீது கொ டூர தா க்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திமேரி (42). இவருடைய கணவர் மஞ்சினி. அங்குள்ள காப்பீடு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சாந்திமேரி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தங்கி, அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கல்லூரி விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு இவர் செல்வது வழக்கம். வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பேருந்து நிலையத்துக்கு சென்று ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பேருந்தில் புதுச்சேரிக்கு செல்வார்.

இந்நிலையில் கல்லூரிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், புதுச்சேரி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் உடுமலை பேருந்து நிலையத்துக்கு சாந்திமேரி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று சாந்தி மேரியை வழிமறித்து, தான் கையில் வைத்திருந்த ம ரக்கட்டையால் சாந்திமேரியின் மு கத்தில் கொ டூரமாக தா க்கினார். இதில் அவர் முகத்தில் கா யம் ஏற்பட்டு ர த்தம் கொட்டியது.

பின்னர் உன்னை கொ ல்லாமல் விடமாட்டேன் என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். சாந்திமேரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சம்பவம் குறித்து சாந்தி மேரியிடம் பொலிசார் விசாரித்ததில், கல்லூரியில் அவருக்கும் அந்த துறையின் தலைவரான, பேராசிரியர் ஒருவருக்கும் இடையே துறை சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் இருந்து வருவதாகவும்,

இது குறித்து கல்லூரி முதல்வரிடம் சாந்திமேரி புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் புதுச்சேரியில் இருந்து சாந்திமேரியின் கணவர் மஞ்சினி உடுமலைக்கு வந்துள்ளார்.