இரகசியமாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் புகுந்த வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்!!

562

வாகனம் தீப்பற்றி எரிந்து

ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியதுடன், அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை அதிகவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் இருந்து 5ஆம் கிலோ மீற்றருக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிவேக வீதியின் இந்த பகுதி நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும், வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் முச்சக்கர வண்டி உள்ளே நுழைந்துள்ளது. சூரியவெவ பகுதி நோக்கி பயணித்த இந்த முச்சக்கர வண்டியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.