வவுனியா மடுகந்தை பகுதியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் கடற்படை வீரர்கள் பயணித்த ஜீப் வண்டி முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதாகத் தெரியவருகிறது.
இவ் விபத்தில் சமழம்குளத்தைச் சேர்ந்த 30 வயதான லனாதீபன் (லனா) என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். காயமடைந்த கடற்படை வீரர்கள் எழு பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.