வவுனியா போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மீது தாக்குதல்!!

354

Sri_Lanka_Busவவுனியாவில் நேற்று முன்தினம் இலங்கை போக்குவரத்துச் சபையை சேர்ந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவில் இருந்து இரவு 8 மணியளவில் கொழும்பு நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது அதனைத் தொடர்ந்து 8.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபையை சேர்ந்த பஸ் வண்டியும் புறப்பட்டது.

நொச்சியாகம பகுதியில் போக்குவரத்துச் சபை பஸ் தனியார் பஸ் வண்டியை விலத்தி முந்திச் சென்றுள்ளது. இதனால் தனியார் பஸ்சின் சாரதியும் நடத்துனரும் போக்குவரத்துச் சபை பஸ்சின் சாரதியான மகேஸ்வரன்(33) என்பவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் கால் பகுதியில் படுகாயமடைந்த சாரதி நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அறிந்த வவுனியா, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் மதியம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.