பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்!!

301

Abuseஇந்தியாவின் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் 16 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியை சேர்ந்த கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுமிக்கு தொடர்ந்து அவர்கள் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அப்பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

ஆனால் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவனின் நண்பர்கள் தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். வழக்கை மீளப் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி கடந்த 23ம் திகதி தற்கொலை செய்து கொள்ள தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவரை காப்பாற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மரணம் அடைந்துவிட்டார்.

இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரது உடலை கேட்டுள்ளனர். ஆனால் பொலிசார் உடலையும், இறப்பு சான்றிதழையும் கொடுக்க மறுத்துள்ளனர்.

சிறுமியின் தந்தை அங்கு டக்சி ஓட்டி வருகிறார். டக்சி ஓட்டுநகர்களுடன் சென்று உடலை எடுத்து வர முயன்ற போது பொலிசார் தடுத்துள்ளனர். பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கு பின் அதிகாலை 2:30 மணிக்கு பொலிசார் சிறுமியின் உடலை எடுத்து செல்ல அனுமதித்துள்ளனர்.

பலாத்காரம் மற்றும் பெண்ணை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று சிறுமியின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நீதி கிடைக்க போராடுவேன். அவர்களை விட மாட்டேன். அவர்கள் தூக்கில் தொங்கும் வரையில் எனது உயிரை விட மாட்டேன். இது சத்தியம் என்று சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.