கோர விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!!

396

கோர விபத்தில்..

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உ யிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றைய தினம் இரவு சேனைகுடியிருப்பு, துரேந்தியமேடு பிரதேச வீதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சென்று மதகுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியதாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உ யிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சேனைக்குடியிருப்பு காமாச்சி வீதியை சேர்ந்த அருளானந்தம் கரன் (வயது 19) மற்றும் சேனைக்குடியிருப்பு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி தனுசியன் (வயது 30) ஆகியோரே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர்.