ஆர்யாவை தேடிச் செல்லும் டாப்சி : காரணம் என்ன?

288

Aaryaராஜாராணி ஹிட்டைத் தொடர்ந்து நயன்தாராவுடன் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதால் உஷாரான நயன்தாரா இதுவே தனது மார்க்கெட்டை கவிழ்த்து விடும் என்று ஆர்யா சிபாரிசு செய்த சில படங்களுக்கு தன்னிடம் கால்சீட் இல்லை என்று சொல்லி நழுவிக்கொண்டார்.

அதோடு அனாமிகாவை முடித்தவர் சிம்பு, ஜெயம்ரவி என இளவட்ட ஹீரோக்களின் படங்களை வேகமாக கைப்பற்றியிருக்கும் நயன்தாரா முன்பு மாதிரி ஆர்யாவுடன் ஊர் சுற்றுவதையும் சுத்தமாக நிறுத்தி விட்டார்.

அதனால் அவர் ஆர்யாவின் பாசறையில் இருந்து வெளியேறி விட்டதை யூகித்துக்கொண்ட கோடம்பாக்கத்தின் மேல்தட்டு ஹீரோக்களின் கவனம் தற்போது நயன்தாரா பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்த நிலையில்தான் நயன்தாராவை தனது கட்டுப்பாட்டில் இருந்து முழுசாக விலக்கிவிடக்கூடாது என்று நினைத்த ஆர்யா மகிழ்திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கும் மீகாமன் படத்திற்கு அழைத்தார். ஆனால், இப்போதைக்கு சான்சே இல்லை என்று இரண்டு கையையும் விரித்து விட்டாராம் நயன்தாரா.

அதனால் நயன்தாராவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக பொலிவுட்டில இருந்து யாராவது முன்னணி நடிகையை தனக்கு ஜோடியாக்க முயற்சி எடுத்த ஆர்யா, ஸ்ருதிஹாசனிடம் பேசினார்.

ஆனால் அவர் மறுத்து விட்டார். அதனால் இப்போது கையிலே வெண்ணெயை வைத்துக்கொண்டு எதற்கு தெருத்தெருவாக அலைய வேண்டும் என்று ஆரம்பம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த டாப்சியையே மீண்டும் தன்னுடன் ஜோடி சேர்த்திருக்கிறாராம ஆர்யா.

இதனால் ஏற்பட்ட திடீர் பாசம் காரணமாக ஆர்யா வேறு படப்பிடிப்பு தளங்களில் இருந்தாலும் அவரை தேடிச்சென்று சந்தித்து அன்பை அள்ளிக்கொடுத்து விட்டு செல்கிறாராம் டாப்சி.