இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர சந்தர்ப்பம்!!

613

Emailஇலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் மின்னஞ்சல் மூலம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் என குறிப்பிடப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றின் பதிவாளர் நாயகம் மஹேசி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தூரப் பிரதேசங்களில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் நலன்களைப் பெற்றுக்கொள்ள இந்த வழி உதவும். முதல் கட்டமாக அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்து வழக்குத் தொடர முடியும்.

நாளின் எந்த நேரத்திலும் அதாவது நள்ளிரவு கூட மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடரலாம். பயண செலவுகள் கிடையாது. வழக்கு தொடர்பான மூல ஆவணங்களை பின்னர் நீதிமன்றிடம் ஒப்படைக்க முடியும்.

நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.