வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் கிழக்கு திமோர், சூடான் நிலை ஏற்படும் : அரசுக்கு ஐ.தே.க எச்சரிக்கை!!

441

Laxmanஅர­சி­ய­ல­மைப்பின் 13வது திருத்தச்சட்டம் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­விடின் கிழக்கு தீமோர் மற்றும் சூடான் நாடு­க­ளுக்கு ஏற்­பட்ட நிலைமை இலங்­கைக்கு ஏற்­படும் அபாயம் உள்­ளது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஸ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

இனப்­பி­ரச்­சினை தீர்­வாக அர­சாங்கம் 13ம் திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தி­னாலோ அல்­லது 13வது திருத்தச் சட்­டத்­துக்கு அப்பால் சென்­றாலோ அதற்கு முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தயா­ரா­க­வுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐ.தே.க வின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­வாறு குறிப்­பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்..

தேசிய பிரச்­சினை தீர்வு விட­யத்தில் அர­சாங்கம் உள்­நாட்­டுக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­னாலே அனைத்து பிரச்­சி­னை­களும் தீர்ந்­து­விடும்.

அதா­வது அர­சி­ய­ல­மைப்பின் 13வது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தா­கவும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும் அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளது. அந்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

யுத்தம் முடி­வ­டைந்து நான்கு வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யிலும் அர­சாங்கம் இவ்­வாறு சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் இருக்­கின்­றது.

உள்­நாட்டில் தேர்தல் காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை போன்று சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளையும் சர்­வ­தேசம் மறந்­து­விடும் என்று அர­சாங்கம் கரு­தக்­கூ­டாது. எத்தனை வரு­டங்கள் சென்­றாலும் சர்­வ­தேசம் வாக்­கு­று­தி­களை மறக்­கப்­போ­வ­தில்லை. கேள்­வி­களை எழுப்பும்.

எனவே இந்த விட­யத்தில் அர­சாங்­கமும் குழம்பி ஏனைய தரப்­புக்­க­ளையும் குழப்­பி­யுள்­ளது. சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­விட்டால் அனைத்து பிரச்­சி­னை­களும் தீர்ந்­து­விடும். தேசிய பிரச்­சினை தீர்வு முயற்­சிக்கு ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ரவு வழங்கும்.

யுத்தம் முடிந்­து­விட்­டது. ஆனால் பிரச்­சினை இன்னும் தீர­வில்லை. பிரச்­சினை இருந்­த­தை­விட தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இவ்­வாறே பய­ணித்தால் நாட்­டுக்கு எதிர்­கா­லத்தில் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­ப­டலாம்.

இந்­தோ­னே­ஷி­யா­வுக்கு எதி­ராக ஒரு காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சிறிய குற்­றச்­சாட்­டுக்­களே முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் இறு­தியில் கிழக்குத் தீமோர் உரு­வா­கி­யது.

அதே­போன்று சூடா­னுக்கு எதி­ராக ஒரு காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சிறிய குற்­றச்­சாட்­டுக்­களே முன்­வைக்­கப்­பட்­டன. இறு­தியில் தென் சூடான் உரு­வா­னது.

தற்­போது இலங்­கைக்கு எதி­ரா­கவும் மனித உரிமைப் பேர­வையில் குற்­றச்­சாட்­டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துடன் பேசித் தீர்த்துக்கொள்வது அவசியமாகும். இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த நாட்டுக்கு ஜெனிவா மனித உரிமைப் பேரவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே 1989ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

எனவே பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.