ஆசியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ள அதிசயம் : விரைவில் மலரப்போகும் தாமரை!!

525

ஆசியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ள அதிசயம்

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் மிகவும் உயர்ந்த கட்டடமாக இது வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகளை கொண்ட கோபுரத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்ய காத்திருக்கிறது.

தாமரை கோபுரத்தில் 50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கான வசதி, 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி, 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும், திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம், அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

90 மாடிகளை கொண்ட இந்த கோபுரத்தின் உச்சிக்கு வெறும் இரண்டு நிமிடங்களில் லிப்ட் மூலம் செல்ல முடியும் என்பது சிறப்பம்சம். 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும் கோபுரத்தை அமைக்க 104 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

பல அதிசயங்களை உள்ளடங்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான கட்டடத்தொகுதியாக அமையவுள்ளது.