எட்டு பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!

302

Abuseடெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும் தோழியை சந்தித்துவிட்டு டெல்லி திரும்புவதற்காக பல்லப்கர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது ஒரு காரில் வந்த 5 பேர் அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் 8 பேர் கொண்ட கும்பலினால் குறித்த பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

அவர்களின் வெறிக்கு ஈடு கொடுக்க முடியாமல் மயக்கமடைந்து கிடந்த அந்த பெண்ணை மீண்டும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்த அவர்கள், பழையபடி பல்லப்கர் பஸ் நிலையம் அருகே இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

விரைந்து செயல்பட்ட பொலிஸார் அந்த காமக்கொடூரர்களில் 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒரு குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட 7 பேரும் தேடப்படும் நபரும் பல்வால் அருகேயுள்ள ஹசன்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.