இலங்கை கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்? திணறும் கடற்படை!!

578

சிலாபத்தை அண்டிய கடற்பரப்பில் ம ர்மான பொருள் ஒன்று மிதந்து வந்ததாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தலம் – பெரியபாடு கடலில் கடல் எல்லையை குறிக்கும் மிதவைக்கு சமமான உபகரணம் ஒன்றே இவ்வாறு மிதந்து வந்துள்ளது.

10 அடி உயரமான இந்த ம ர்மபொருள் 5000 கிலோகிராமிற்கும் அதிக நிறையை கொண்டுள்ளது. அதன் கீழ் பகுதி பைபர் அல்லது வேறு பொருளினால் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் மேல் பகுதி இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் அதிக கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த உபகரணம், கடலில் அடித்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடற்படையினர் இணைந்து வெளியே கொண்டுவர முயற்சித்த போதிலும், அதிகளவிலான நிறை காரணமாக அதனை கடற்கரைக்கு கொண்டுவர முடியவில்லை.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது மிதவையாக அல்லது கடலின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக நிர்மாணிக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அதிக தொழில்நுட்பத்தினால் இந்த ம ர்மபொருள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.