உழவு இயந்திரத்தில் சிக்கி..

முல்லைத்தீவு – பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்கி உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்விளான் ,துணுக்காய் பகுதியை சேர்ந்த தம்பிமுத்து சுரேஷ்குமார்(44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றும் அனுமதி பெற்ற குறித்த குடும்பஸ்தர் நேற்று பிற்பகல் பாலியாற்றுப் பகுதியில் மணல் ஏற்றிய பின்னர் உழவு இயந்திரத்தை முன்னோக்கி செலுத்த முற்பட்டவேளை உழவு இயந்திரம் தடம்புரன்டு இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




