தேசிய ரீதியான கனிஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் போட்டியில் வவுனியாவிற்கு மூன்று பதக்கங்கள்!!

479

தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் வவுனியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளது.கொழும்பு சுகதாச விழையாட்டு மைதானத்தில் செப்டெம்பர் 02,03,04 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற 5 ஆயிரம் மீற்றர் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் கெ.நிசோபன் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதுடன், 5 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்கு பற்றிய சிறிநகர் ஜெ.தனுசிகா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.பதக்கங்களை வென்றவர்கள் பயிற்றுவிப்பாளர் கே.நவநீதனின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.