புத்தாண்டில் பணத்துக்காக நடனம் ஆடுவதா : நடிகைகள் மீது நித்யாமேனன் பாய்ச்சசல்!!

304

Nithya-Menon

நடிகைகள் பலர் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விடிய விடிய நடனம் ஆடினர். மும்பை, ஐதராபாத், சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் இந்த நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பிரியங்கா சோப்ரா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆட பல கோடி வாங்கினார்.

நடிகை சர்மி ஐதராபாத்தில் ஆட பெரும் தொகை சம்பளமாக பெற்றார். இன்று இரவும் சில ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதனை நித்யாமேனன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இவர் தமிழில் நூற்று என்பது, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சேரன் இயக்கத்தில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஸ்ரீப்ரியா இயக்கத்தில் மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

நித்யாமேனனை பிரபல ஹோட்டல் நிர்வாகத்தினர் அணுகி 31ம் திகதி இரவு புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆட வேண்டும் என அழைத்தனர். இதற்காக பெரும் தொகை தருவதாகவும் கூறினர். அதற்கு நித்யாமேனன் மறுத்து விட்டார். பணத்துக்காக நடனம் ஆடுவது எனக்கு பிடிக்காது. பணம் கொடுத்தால் நடனம் ஆடும் கேவலமான நடிகை நான் அல்ல என்று அவர் ஆவேசமாக கூறிவிட்டாராம்.

சர்மி உள்ளிட்ட நடிகைகள் நடனம் ஆடுவதை மறைமுகமாக கண்டித்தே அவர் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பணம் வாங்கி நடனம் ஆடிய நடிகைகள் நித்யாமேனன் மேல் கோபத்தில் உள்ளனர்.