16 வயது சிறுமி பரிதாப ம ரணம்!!

313

16 வயது சிறுமி..

காரைதீவில் வீடொன்றில் இன்று ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக சிறுமி ஒருவர் உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை முதலில் அவதானித்த குறித்த சிறுமியின் சகோதரர் அயலவர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை உ யிரிழந்தவர், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்த 16 வயதுடைய நடேஸ்வரராஜன் அக்ஸயா எனத் தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.