யாழில் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய கும்பல்!!

245

யாழில்..

யாழ். மாவட்டத்தில் உள்ள நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்றை சேர்ந்த நால்வர், வீட்டிலிருந்தவர்களை அ ச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாள்களைக் காண்பித்து குறித்த வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி வீட்டிலிருந்த பொருட்கள், தளபாடங்களை சேதப்படுத்தி சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.