யாழில் சஜித்துடன் கூட்டமைப்பு இரகசிய சந்திப்பு!!

558

இரகசிய சந்திப்பு

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்தின, யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்தப்பு எதற்காக நடைபெற்றது எனவும், என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படதெனவும் இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.