சமீபத்தில்தான் தனுஷ் 5ம் வகுப்பு என்ற பெயரில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவின்போது, தப்பித்தவறிகூட யாரும தனுஷைப்பற்றி பேசி விடாதீர்கள் என்று படக்குழுவினர் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்களை கேட்டுக்கொண்டனர்.
காரணம் இந்த தலைப்பை வைத்ததற்கே கோபத்தில் இருக்கும் தனுஷ், அவரைப் பற்றி ஏதாவது பேசப்போக மீண்டும் கொதித்து விடக்கூடாதே என்பதில் ஏற்பட்ட அச்சம்தான் காரணமாம்.
அதையடுத்து, இப்போது சரவணன் என்கிற சூர்யா என்ற பெயரிலும் ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, இந்த தலைப்பை மாற்றுமாறு சூர்யா மிரட்டியதாக கூறினார் பட இயக்குனர் எஸ்.எம்.ராஜா.
மேலும், இவர் தம்பி கார்த்தி மட்டும் நான் மகான் அல்ல, அலெக்ஸ் பாண்டியன் என்ற ரஜினி தலைப்புகளை பயன்படுத்தி மாசுபடுத்தலாம். ஆனால், இன்னொருத்தர் இவர்கள் பெயரில் படம் எடுக்கக்கூடாதா என்று பொங்கினார்.
மேலும் இதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நான் தலைப்பை மாற்றுவதாக இல்லை. அவர் சம்பந்தப்பட்ட விடயங்களை கதை பண்ணியிருந்தால்தானே நான் பயப்பட வேண்டும்.
அப்படி இல்லாதபோது எதற்காக பயப்பட வேண்டும் என்று சொன்ன அவர் வேண்டுமானால் படத்தை சூர்யாவுக்கு போட்டுக்காட்டகூட நான் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.