வவுனியாவில் நீண்ட வறட்சியின் பின் கடும் மழை!!

330

கடும் மழை

நீண்ட வறட்சியின் பின் வவுனியாவில் இன்று (13.09) மாலை கடும் மழை பெய்தது. நாட்டில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த கடும் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களது இயல்பு நிலை பாதிப்படைந்திருந்தது.