காதலனுடன் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் தந்தையிடம் க டத்தல் நாடகம் போட்ட மகள் கைதாகியுள்ள நிலையில் அவரிடம் தந்தை கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வித்யா என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் வித்யா கடந்த வியாழன் தனது சகோதரரை இண்டர்னெட் காலில் தொடர்பு கொண்டு தன்னை யாரோ க டத்திவிட்டதாக கூறினார்.
இது குறித்து சகோதரர் தனது தந்தை ஆறுமுகத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆறுமுகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் வித்யாவை ஒப்படைக்க வேண்டுமென்றால் பத்து லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டினான்.
இதையடுத்து சென்னைக்கு பதறியடித்து கொண்டு வந்த ஆறுமுகம் கோயம்பேடு பொலிசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில் வித்யா தனது காதலன் மனோஜுடன் சேர்ந்து க டத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது.
மலேசியாவில் பணிபுரிந்த மனோஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கனடாவுக்கு சென்று செட்டில் ஆக நினைத்துள்ளனர்.
அதற்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால், தனது தந்தையிடம் பணம் கேட்டு மி ரட்ட க டத்தல் நாடக திட்டத்தை வித்யாவே மனோஜுக்கு வகுத்து கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மகள் வித்யாவிடம் ஆறுமுகம் பேசினார்.
அவர் பேசுகையில், இப்படிச் செய்து நம் குடும்பத்தையும் உன்னையும் அசிங்கப்படுத்திட்டியே, உன்னை சிறைக்கு அனுப்ப நானே காரணமாகிவிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.