5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை குறித்து எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை : கெஹலிய ரம்புக்வெல்ல!!

652

Rambukwellaஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்து செய்யாதிருக்க அமைச்சரவை தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் 2016ம் ஆண்டு தொடக்கம் நடைபெறாது எனவும் அதற்கு பதிலாக மாற்று பரீட்சை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்ததார். அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கல்வி அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ரத்து செய்யாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியானது.

எனினும் அமைச்சரவையில் அப்படி யோசனைகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சரவை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.