தமிழ் பெண்

சர்வதேச சிகை அலங்கார போட்டி தற்போது பாரிஸில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் கலந்துக்கொண்டுள்ளனர்.

குறித்த மூவரில் இலங்கை தமிழ் பெண்ணொருவரும் கலந்துகொண்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கயல்விழி ஜெயபிரகாஷ் என்பவரே இந்த போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இவர், கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் பல விருதுகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.




