மாணவிகளை து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய மற்றுமொரு ஆசிரியர் கைது!!

473

ஆசிரியர் கைது

பாணந்துறை சிலுவை சந்தி பகுதியில் பகுதி நேர ஆசிரியரின் வீட்டுக்கு ஆங்கிலம் கற்க சென்ற இரண்டு மாணவிகள் து ஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியரை தாம் கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான ஆசிரியரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாணவிகள் நேற்று முற்பகல், சந்தேக நபரான ஆசிரியரிடம் இரண்டு மணி நேரம் ஆங்கிலம் கற்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள இந்த மாணவிகள், ஆசிரியரின் வீட்டுக்கு சென்ற போது, அங்கு அவர் மட்டுமே இருந்துள்ளார். சந்தேக நபர் தனது மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

மனைவி வீட்டில் இல்லாததால், தேனீர் தயாரிக்க முடியுமா எனக் கேட்டு, சந்தேக நபர் தந்திரமான முறையில் தம்மை து ஷ்பிரயோ கத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் தமது பெற்றோரிடம் சம்பவம் பற்றி கூறியதுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்தே பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.