சவூதியின் எரிபொருள் வயல் மீது தா க்குதல் : இலங்கைக்கு ஏற்பட போகும் பாதிப்பு!!

414

இலங்கைக்கு ஏற்பட போகும் பாதிப்பு

சவூதியின் மசகு எண்ணெய் விலை உயர்த்தப்பட்டால் இலங்கைக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சவூதியின் எரிபொருள் வயல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தா க்குதலை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இலங்கை, சிங்கப்பூரில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்தாலும் மத்திய கிழக்கில் இருந்தே அதிக மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

எனினும் சவூதியில் எரிபொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த தா க்குதலுக்கு யேமனின் ஹுதி தீவிரவாதிகள் உரிமைக்கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.