மலேசியாவில் இலங்கையர்கள் மீது பொ லிஸார் து ப்பாக்கிச்சூ டு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

196

மலேசியாவில்..

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் ரவாங் – பத்து ஆராங்கில், பொலிஸாருக்கும் ஏனைய மூன்று பேருக்கும் இடையில் நடந்த து ப்பாக்கிச்சூ ட்டு சம்பவம் குறித்த முழு விசாரணையைத் தொடங்குமாறு, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி.இராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசிய அரசாங்கத்திடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சம்பவம் குறித்த பொலிஸாரின் பதிவுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள ச ர்ச்சை காரணமாகவே இராமசாமி இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த பிரித்தானியாவில் வசித்து வந்த, ஜனார்த்தனன் விஜயரத்னம், அவரது மைத்துனர் தவச்செல்வன் மற்றும் மகேந்திரன் சந்திரசேகரன் ஆகிய மூன்று பேர் பயணித்த ஒரு காரை, பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ்சில் என்ற இடத்தில் பொலிஸார் நிறுத்த உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர்கள் அந்த உத்தரவைப் புறக்கணித்ததால் சுமார் 7 கி.மீ, அந்தக் காரைத் துரத்திச் சென்றதாகவும் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த நபர்கள் கொ ள்ளையர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார், துரத்தும்போது அவர்களில் இருவர் அதிகாரிகள் மீது து ப்பாக்கி பி ரயோகம் மேற்கொண்டதாகவும், தற்காப்புக்காகவே பொலிஸார் திருப்பி சு ட்டதாகவும் கூறியுள்ளனர்.

இவர்களுடன் இருந்த, ஜனார்த்தனனின் மனைவி, மோகனாம்பாள் கோவிந்தசாமி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் பொலிஸ் தலைவர் நூர் அஸாம் ஜமாலுட்டின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மோகனாம்பாளின் நிலை குறித்து, தகவல்களை வழங்க பொலிஸார் மறுக்கின்றனர் என குடும்பத்தினரின் சட்டத்தரணி சிவாநந்தன் இராகவா குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸார் தங்கள் சம்பவப் பதிவில் உறுதியாக இருக்கும்போது, இ றந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேறு கதை இருக்கக்கூடும் என முதலமைச்சர் இராமசாமி தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தங்கள் நிகழ்ச்சிகளின் பதிவில் பழையக் கதை ஒன்றை மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். ரவாங்கில் நடந்த து ப்பாக்கிச்சூ ட்டில் என்ன நடந்தது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

சந்தேகத்திற்குரிய கொ ள்ளையர்களைப் பொலிஸாரின் துப்பாக்கிச்சூ ட்டில் ம ரணமடையச் செய்த பல சம்பவங்கள், பொலிஸாரின் சாட்சியங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல.

இதுவரை பொலிஸாரின் து ப்பாக்கிச்சூ ட்டில் பொதுமக்கள் இ றந்த வழக்குகளில், பொலிஸாரை பொறுப்பேற்கச் செய்வது மற்றும் து ப்பாக்கிச்சூ டு நியாயமானதா என்பதைத் தீர்மானிப்பது போன்ற எந்தவொரு தீவிர விசாரணையும் நடத்தப்படவில்லை.

உயர்மட்ட பொலிஸ் அதிகாரி அப்துல் ஹமீத் படோர் உத்தரவாதம் அளித்தபோதும், பொலிஸ் நடவடிக்கைகளில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை

தடுப்புக் காவல் ம ரணங்கள், பொலிஸ் து ப்பாக்கிச்சூட் டின் விளைவாக ஏற்படும் ம ரணங்கள் மற்றும் சீருடை அணிந்த நபர்களிடமிருந்து வெளிப்படும் பிற முறைகேடுகள் அனைத்தும் பொது மக்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது.

இதனால், பத்து ஆராங் கொ லை முதல் சம்பவம் அல்ல, நிச்சயமாக அது கடைசியாகவும் இருக்காது. இங்கு முக்கியமானது என்னவென்றால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அரசாங்கம் முழு விசாரணையைத் தொடங்க வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர் சு ட்டுக்கொ ல்லப்பட்ட சம்பவம் குறித்து தகவல்களை வழங்க பொலிஸார் மறுப்பதாகவும் அவரது மனைவி கா ணாமல்போயுள்ளதாகவும் சட்டத்தரணி சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனார்த்தனம் விஜயரத்னம் மற்றும் அவரது மனைவி மோகனாம்மாள் கோவிந்தசாமி ஆகியோர் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர்.

இரண்டு வாரங்கள் மலேசியாவில் தங்கியிருக்க வந்தவர்கள் என்பதுடன், வீட்டை உடைத்து திருடும் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி அவர்கள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். கடந்த 14ஆம் திகதி அதிகாலை நடந்த து ப்பாக்கி பி ரயோகத்தில் ஜனார்த்தனன் விஜயரத்னம் கொ ல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.