வவுனியாவில் ஒரு மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துகளில் 8 பேர் படுகாயம்!!

228

8 பேர் படுகாயம்

வவுனியாவில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரையான ஒரு மணி நேரத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்து சம்பங்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் தாய், மகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன், மகாறம்பைகுளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவரொருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் குருமன்காடு பகுதியிலும் மோட்டார் சைக்கிள் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த விபத்துகளில் மொத்தமாக 8 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை வவுனியாவில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 34 வயதுடைய இளைஞரொருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.