கிளிநொச்சியில் உயிருக்கு போராடும் குழந்தை : உதவி செய்ய முன்வாருங்கள் : பகிர்ந்து உதவுங்கள்!!

1303

உதவி செய்ய முன்வாருங்கள்

கிளிநொச்சி பகுதியில் வசித்து வரும் திலீபன் சாந்தினி தம்பதிகளின் மூன்றாவது மகள் இனுஷா இதய நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார். இக்குழந்தையின் தந்தையார் முன்னாள் போராளி தாயாரின் சகோதரி மாவீரா் ஆவார்.

இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் கொழும்புக்கு ஒவ்வொரு வாரமும் சென்று சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

தற்போது அவசரமாக இதயத்தில் சந்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியார்கள் தெரிவித்தள்ளனார் கொழும்பில் ஒரு மாதம் தாங்கியிருந்து சந்திரசிகிச்சை செய்ய வேண்டும்.

ஆனால் தந்தையார் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகின்றார் இவர்களினால் வாரம் ஒரு முறை கொழும்பு சென்று சிகிச்சை பெறுவது என்பது கடினமான விடயமாகும்.

அத்துடன் ஒரு மாதம் தாங்கி நின்று பிள்ளையின் சந்திரசிகிச்சை செய்ய பணவசதி இன்றி கஷ்டப்படுகின்றார்கள் பிள்ளையின் உயிரைக் காக்கவும் இவர்களின் குடும்பநிலையை கருத்தில் கொண்டு உதவி செய்ய முன்வருங்கள்.

உங்களிடம் இல்லாததை கடவுளிடம் கேட்கின்றீர்கள் உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள் நீங்களும் கடவுளாக பார்க்கப்படுவீர்கள்.