தண்டவாளத்தில் உறங்கிய நபருக்கு ஏற்பட்ட நிலை!!

260

புகையிரதத்தில் சிக்குண்டு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த நபர் இன்று தண்டவாளத்தில் நித்திரை கொண்டிருந்த வேளை புகையிரதத்தில் சிக்குண்டுள்ளார்.

உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் இவர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிர்ழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.