ம ரண வீடொன்றுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்துள்ள கதி : 18 பேர் படுகாயம்!!

279

18 பேர் படுகா யம்

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பேருந்தொன்று குடை சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் ப லத்த கா யங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்த விபத்து அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு ம ரண வீடொன்றுக்கு சென்று விட்டு மீண்டும் கந்தளாய் சென்றவர்கள் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ப லத்த கா யங்களுக்கு உள்ளான மூன்று சிறுவர்கள் அ திதீவிர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழையும், வேகமுமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.