திரையரங்குகளில் கட் அவுட், பேனர் வைப்பதில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!!

281

VIJAYவிஜய், அஜித் ரசிகர்கள் இடையே தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விஜய்யின் ஜில்லா படமும், அஜீத்தின் வீரம் படமும் வருகிற 10ம் திகதி ஒரே நாளில் ரிலீசாகிறது.

ஏற்கனவே போக்கிரி, ஆழ்வார் படங்கள் இது போல் ஒன்றாக வந்தன. அப்போதும் இருவரின் ரசிகர்களும் அடிதடி தகராறில் ஈடுபட்டனர். தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய், அஜித் படங்கள் ஒன்றாக வருகின்றன. ரசிகர்கள் இப்போதே தியேட்டர்களிலும், சுவர்களிலும் இடம் பிடிக்க துவங்கியுள்ளனர்.

மதுரையில் இரு தரப்பு ரசிகர்களும், ஜில்லா, வீரம் படங்கள் பற்றி சுவர் விளம்பரம் செய்த போது தகராறில் ஈடுபட்டனர். சேலத்திலும் இது போல் மோதல் நடந்தது. சென்னையிலும் தியேட்டர்களில் கட் அவுட், பேனர் வைப்பதில் போட்டி நிலவுகிறது.

விஜய் ரசிகர் மன்ற மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை எஸ்.குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் பால முருகன், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன், மாதவரம் இளங்கோ உள்ளிட்டோர் சென்னை மற்றும் புறநகர் பகுதி தியேட்டர்களில் ஜில்லா படத்தை வரவேற்று விஜய் கட்அவுட்கள் வைக்க துவங்கியுள்ளனர்.

பேனர்களும் கட்டி வருகிறார்கள். கட் அவுட், பேனர்களை கிழிப்பதை தடுக்கும்படி அம்பத்தூர் போலீசில் பால முருகன் புகார் மனு அளித்துள்ளார்.

இதுபோல் சென்னை அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சக்கின் மணி, புரசை சரவணன், ரெட் சாரதி மற்றும் காஞ்சி ரமேஷ் உள்ளிட்டோர் வீரம் பட கட் அவுட் மற்றும் பேனர்களை போட்டியாக நிறுவி வருகிறார்கள். தியேட்டர்களில் மாறி மாறி இடம் பிடிப்பதால் தகராறு மூண்டுள்ளது. ரசிகர்களை சமாதானபடுத்த முடியாமல் தியட்டர்காரர்களும் தவிக்கிறார்கள்.