தென்னிலங்கையில் பாரிய வெள்ளத்தில் சிக்குண்டு உயிருக்கு போராடும் மக்கள் : மீட்கும் முயற்சிகள் தீவிரம்!!

537

வெள்ளத்தில் மூழ்கியுள்ள..

தென்னிலங்கையில் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலியின் சில பகுதியிலுள்ள மக்கள் வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர் சிக்குண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹ ஹபுகல பொல்துவ பகுதியில் 76 குடும்பங்களும், பின்னகொல துவ பகுதியில் 28 குடும்பங்களும் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்பு குழுவினர் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளமையினால் அங்கு வசிக்கும் அனைத்து மக்களும் வீட்டில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

ஹோலுவாகொட தேவகிரி விகாரை மாவத்தை நீரில் மூழ்கியுள்ளமையினல் அங்கும் பாரிய அளவிலான மக்கள் சிக்கியுள்ளனர். சில வீதிகளில் 6 அடிக்கு மேல் நீர் நிறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கும் பிரதேசத்தில் பாதிக்கப்படாத மக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளவிய ரீதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.