உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரு மாவட்டங்களில் மின் விநியோக தடை!!

280

மின் விநியோக தடை

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சார விநியோக தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் மின்சார விநியோக தடையை மேற்கொள்வதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுலக்ஷனா ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

காலியில் மின்சார நுகர்வோர் 1000 பேருக்கும், மாத்தறையில் மின்சார நுகர்வோர் 7000 பேருக்கும் இவ்வாறு மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.