கனடாவில்..
கனடாவில் கடந்த வாரம் இலங்கை தமிழ் இளைஞன் சு ட்டுக் கொ ல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு Scarboroughவில் பகுதியில் வைத்து 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்பவர் சு ட்டுக்கொ லை செய்யப்பட்டார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று முன்தினம் சரண்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சரண்ராஜ் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில் நேற்று நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளார்.