ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்மாருக்கு ஜனாதிபதி நிதியுதவி!!

486

ஜனாதிபதி நிதியுதவி

பாரிய பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜனாதிபதி செயலகத்தில் நிதி உதவி வழங்கியுள்ளார்.

இதற்கமைய ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான வத்தலை, ஹெந்த பிரதேசத்தைச் சேர்ந்த முதித்தா தனஞ்சனி எதிரிவீரவுக்கு 25 இலட்சம் ரூபா நிதி உதவியும்,

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இம்பல்கஸ்தெனிய யட்டத்தாவல பிரதேசத்தில் வசிக்கும் கே.எம்.துஷித்த மங்கள ரூபசிங்கவுக்கு 20 இலட்சம் ரூபா நிதி உதவியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.