வாகன விபத்தில் சிறுமியொருவர் பலி!!

437

வாகன விபத்தில்..

மட்டக்களப்பு, கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ப லியாகியுள்ளதுடன் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தோப்பூருக்கு சென்ற கார் ஒன்றும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற விவசாய திணைக்களத்திற்க்கு சொந்தாமான கெப் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் தோப்பூரை சேர்ந்த பாத்திமா பஹ்மிதா வயது (14) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கெப்ரக வாகனத்தில் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.