வவுனியா தோணிக்கல் பகுதியில்..

வவுனியா தோணிக்கல் பகுதியில் வர்த்தகர் ஒருவர் மீது நேற்று (24.09.2019) காலை 10.30 இருவர் தா க்குதல் மேற்கொண்டதில் கா யமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது தொழிலுக்கான களஞ்சியசாலை ஒன்றினை நடாத்தி வந்துள்ளார். குறித்த களஞ்சிய சாலை அவரது உதவியாளராக இருந்த நபரின் வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த களஞ்சியசாலைக்கான வாடகைப் பணம் கொடுக்கப்படவில்லை என வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸில் மு றைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வர்த்தகரை
பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வாடகைப் பணத்தினை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க வர்த்தகர் பணத்தினை செலுத்தியுள்ளார். இந் நிலையில் நேற்றையதினம் களஞ்சியசாலையிலிருந்து அவரது உடமைகளை அகற்றுவதற்காக அவ்விடத்திற்கு சென்ற சமயத்தில் குறித்த வீட்டாருக்கும் வர்த்தகருக்குமிடையே வா ய்த்தர் க்கம் ஏற்பட்டுள்ளது.

வா ய்த்தர் க்கம் மோ தலாக மாறியதில் வீட்டு உரிமையாளரின் தா க்குதலுக்கு உள்ளாகிய வர்த்தகர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வீட்டு உரிமையாளரான பெண் வர்த்தகர் தன்மீது தா க்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




