திருகோணமலையில் புத்தர் சிலைகள் உடைப்பு : தீவிர விசாரணைகள் ஆரம்பம்!!

410

புத்தர் சிலைகள் உடைப்பு

திருகோணமலையில் விகாரையின் புத்தர் சிலைகள் இரண்டு உடைக்கப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவின் அபயபுர அபயாராம விகாரையில் உள்ள புத்தர் சிலைகளே உடைக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் தானம் ஒன்றிற்காக வெளியே சென்ற சந்தர்ப்பத்தில் உடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்ததாக விகாராதிபதி மானின்கமுவே விமலஜோதி திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உடனடியாக 119 என்ற பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவித்ததாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய உடனடியாக செயற்பட்ட உப்புவெலி பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு சிலை உடைக்கப்பட்ட நிலையில் மற்றுமொரு சிலை கண்ணாடி பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தை ஒருவரும் நேரில் பார்க்கவில்லை. சந்தேகநபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்