வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீ ராமாபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் மழை வேண்டி அம்மனுக்கு 108 குட அபிசேகம்!!(படங்கள்)

298

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீ ராமாபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த 1ம் திகதி மழை வேண்டி 108 குட நீரினால் அம்மனுக்கு அபிசேகம் நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரதேச மக்கள் பலர் ஆர்வத்துடன் அம்மனுக்கு நீரெடுத்துவந்து அபிசேகம் செய்தனர்.

வவுனியாவில் போதிய மழைவீழ்ச்சியின்மையால் வறட்சி நிலவுகின்றது. வவுனியாவின் பெரிய குளங்கள் அனைத்தும் விவசாயத்துக்கு போதுமான நீர் இன்றி காணப்படுகின்றது. இதனால் நெற்பயிருக்கு பாச்ச நீரின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இன் நிலைமையில் வவுனியாவின் பல ஆலயங்களில் மழை வேண்டி சிவாச்சார்யர்களால் சிறப்பு யாகங்கள், சிறப்பு பிராத்தனைகள், பூசைகள் என்பன நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

-படங்கள் மதுஜன்-

v3v4v1v8v7v9