சீரற்ற காலநிலையால் பெருந்தொகையானோர் பாதிப்பு!!

406

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலை தாக்கங்களால் இதுவரை 80ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கடும் மழைக் காரணமாகவே இந்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் 54ஆயிரத்து 985பேர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். வெள்ளம், மண்சரிவு, கடும் காற்று என்பவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை களு, ஜின் மற்றும் நில்வள கங்கையின் நீர்மட்ட உயர்வால் மில்லகந்த, பெத்தேகம மற்றும் பனடுகம போன்ற இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.