அனுராதபுரம் – றம்பாவ பகுதியில்..

அனுராதபுரம் – றம்பாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் றம்பாவ பகுதியை சேர்ந்த பந்துல எனப்படும் 43 வயதுடைய நபரே உ யிரிழந்துள்ளார்.

ஏ-9 வீதியில் றம்பாவ சந்திக்கு அருகாமையில் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, யாழில் இருந்து சென்ற கெப் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதன் பின்னர் அவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை றம்பாவே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




