8 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்பிட்டி – நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் தாயார் தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு சென்றிருந்த வேளையே சந்தேகநபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிறுமியின் தாய்க்கு அவரது சகோதரி மூலம் அறியக்கிடைத்துள்ளது. இதனையடுத்து நாட்டிற்கு வந்த அவர் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறையிட்டுள்ளார்.
இதனடிப்படையில் கைதான தந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.