மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய 18 பொதிகள்!!

411

18 பொதிகள்

தலைமன்னார் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் 18 பொதிகளைக்கொண்ட பீ டி சுற்றும் இலைகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 18 மூடைகள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 840 கிலோ கிராம் பீ டி இலைகள் காணப்பட்டுள்ளது.

கடற்கடையினரின் குறித்த இந்த சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டதுடன் மீட்கப்பட்ட பீ டி இலைகள் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.