மலேசியாவில் இலங்கை தமிழர் சு ட்டுக்கொ லை, மனைவி மாயம் : பின்னணி என்ன?

215

மலேசியாவில்..

அண்மையில் மலேசியாவில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பொலிஸாரினால் சு ட்டுக்கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  உ யிரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர்.

கடந்த 14ம் திகதி இலங்கை நாட்டவரான ஜனார்த்தனன் விஜயரத்தினம் மலேசியாவில் வைத்து பொலிஸாரினால் சு ட்டுக்கொ ல்லப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, உ ரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர். இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

“பிரித்தானியாவில் வசித்து வந்த 40 வயதான விஜயரத்தினம், அவரது மைத்துனர், மற்றொரு மலேசிய நாட்டவர் ஆகியோர் சென்றுகொண்டிருந்த காரை சிலாங்கூர் மாவட்டத்தின் பண்டார் கவுன்டி ஹோம்ஸுக்கு அருகில் வைத்து பொலிஸார் நிறுத்த சொல்லியுள்ளனர்.

எனினும், அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த காரை 7 கிலோ மீற்றர் தூரத்துக்கு துரத்திச் சென்ற போது, விஜயரத்தினம் சென்றுகொண்டிருந்த காரிலிருந்து பொலிஸாரை நோக்கி து ப்பாக்கிச் பி ரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தற்காப்புக்காக து ப்பாக்கிச் சூ டு நடத்தியதில் காரில் பயணித்த மூவரும் உ யிரிழந்ததாக ஊடகங்களிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பொலிஸார் அதிகார து ஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விஜயரத்தினத்தின் குடும்பத்தார் சந்தேகம் வெளியிட்டதை தொடர்ந்து, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

விஜயரத்தினத்துடன் காரில் சென்ற இரு ஆடவர்களான தவசெல்வன் கோவிந்தசாமி, மகேந்திரன் சந்திர சேகரன் ஆகிய இருவரும் ‘08’ எனும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் பல கொ ள்ளை வழக்குகளில் தேடப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மலேசியாவில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக நாட்கள் விஜயரத்தினம் தங்கிவிட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பொலிஸாரின் வாதத்தை வலுவாக மறுத்துள்ளது விஜயரத்தினத்தின் குடும்பம்.

அவர்களைப் பிரதிநிதித்து வாதிடும் சட்டத்தரணி பொன்னுசாமி உதயகுமார், “இ றந்துபோன ஆடவர் மூவரது நெஞ்சிலும் கு ண்டு பாய்ந்திருக்கிறது. ஒருவருக்கு தலையிலும் கு ண்டு பாய்ந்துள்ளது.

அதனைப் பார்த்தால் திட்டமிட்டு சு ட்டுக் கொ ன்றது போலுள்ளது, தற்காப்புக்காகச் சு ட்டது போலில்லை,” என்று தி கார்டியன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“அதிகாலை வேளையில் ஒதுக்குப்புறத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை. பொலிஸார் யாருக்கும் கா யம் ஏற்படவில்லை.

பொலிஸ் வாகனத்தில் து ப்பாக்கிக் கு ண்டு ஏதும் பாயவில்லை,” என தமது சந்தேகத்துக்கான காரணங்களைத் சட்டத்தரணி விளக்கினார்.

மேலும், விஜயரத்தினத்தின் குடும்பத்தார் யாரும் இதுவரை பார்த்திராத சிவப்பு வோல்க்ஸ்வேகன் போலோ காரில் அந்த மூவரும் சு ட்டுக் கொல் லப்பட்டிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக அவரது குடும்ப நண்பரான சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

அந்த காரில் இருந்த நான்காவது நபரின் காலில் கு ண்டடிப்பட்டதாகவும் ஆனால் அந்த நபர் காரிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடிவிட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னதாக விஜயரத்தினத்தின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

ஆனால், காரில் நான்காவது நபர் இருந்ததை பொலிஸார் மறுத்துள்ளனர். அந்த நான்காவது நபர், விஜயரத்தினத்தின் மனைவியும் மலேசியருமான மோகனாம்பாளாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் குறிப்பிடுகின்றனர்.

கணவர் மற்றும் சகோதரருடன் இரவு உணவு அருந்துவதற்காக அன்றிரவு வெளியில் சென்ற மோகனாம்பாள், அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை, ஆடவர்களும் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

கடந்த மாதம் 27ம் திகதியிலிருந்து விடுமுறைக்காக மலேசியா வந்திருந்த விஜயரத்தினத்தின் குடும்பத்தார், பிரித்தானியாவின் போர்ட்ஸ்மத்தில் வசித்து வந்தனர். அவர்களது இளைய பிள்ளை பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்.

விஜயரத்தினம் பிரித்தானியாவில் வசிக்கவில்லை என்றும் அவர் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான ஆவணம் ஏதும் இல்லை என்றும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்தக் குடும்பம் லண்டனிலிருந்து கோலாலம்பூர் சென்று திரும்புவதற்கான விமானச் சீட்டுகளின் ரசீதைப் பார்த்ததாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.